Show all

எடப்பாடி குறித்து சசிகலா பகடி!

நான் பழைய எடப்பாடி கிடையாது என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளாரே அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என சசிகலாவிடம் கேட்ட போது, அப்படியா! அது என்ன வேறுபாடு என நீங்கதான் பார்த்து தெரிஞ்சுக்கணும். எனக்கு தெரியவில்லை என்று சிரித்தார்.
 
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அதிமுக யாருக்கு என்ற போட்டியில் அதிக ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் அதிமுகவை சசிகலாவின் உதவியுடன் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் பன்னீர் இருந்து வருகிறார்; இது ஒருபக்கம். 

மறுபக்கம்- சசிகலா தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசியல் பயணம் செய்து வருகிறார். தஞ்சையில் சசிகலா உள்ள நிலையில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அண்ணாவின் பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை வெற்றிக்கு எடுத்துச் செல்வார்கள். அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலில் வெற்றி பெறும். போகும் இடங்களில் எல்லாம் இதை மக்களே சொல்கிறார்கள், என்று தெரிவித்தார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பன்னீர் கூறியிருந்தாரே அது குறித்து சொல்லுங்கள் என சசிகலாவிடம் வினா எழுப்பப்பட்டது.  பன்னீர் சரியாகத்தான் சொல்லியிருக்காரு. எங்கள் தொண்டர்களின் வெளிப்பாடும் அதுதான். பண்ருட்டி ராமசந்திரன் எங்கள் கட்சியின் முன்னோடி அவரை ஓபிஎஸ் பார்த்ததில் தவறு இல்லை, தெரிவித்தார்.

அதிமுகவை என் தலைமையில் வழிநடத்த வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்றார் சசிகலா. 

நான் பழைய எடப்பாடி கிடையாது என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளாரே அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என சசிகலாவிடம் கேட்ட போது, அப்படியா! அது என்ன வேறுபாடு என நீங்கதான் பார்த்து தெரிஞ்சுக்கணும். எனக்கு தெரியவில்லை என்று சிரித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,373.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.