Show all

தமிழகத்தில் ஏன் மோடி அலை அடிக்கக் கூடாது.

காஷ்மீரில் மோடி அலை அடிக்கும் போது தமிழகத்தில் ஏன் மோடி அலை அடிக்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், மோடி அலை அடித்தது. காஷ்மீரிலேயே மோடி அலை அடிக்கும் போது, தமிழகத்தில் ஏன் மோடி அலை அடிக்கக் கூடாது.

 

இந்தியாவைப் பொறுத்தவரை ஊழல் இல்லாத ஆட்சி என்பதை பாஜகவால் மட்டுமே சொல்ல முடியும் என்று தமிழிசைக் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.