Show all

போகித்திருநாள் வாழ்த்துக்கள்!

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று போகித்திருநாள்! மார்கழி மாதத்தின் இறுதி நாளில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் போகித் திருவிழாவை, தூய்மைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். விழாமல் இருப்பதற்கு விழா என்று, வணிக நோக்கத்தை சமுதாய நோக்கமாக முன்னெடுக்கும் உலகின் ஒரே இனம் தமிழினம். இதில் உடைந்து வீணாகிப்போன பழைய பொருட்களை ஒழித்து புதிய பொருட்களை வாங்குவதற்கு திட்டமிடுகிற நாளாக போகி கொண்டாட்டம் அமைகிறது. 
 
இன்றைக்கு மனங்களை தூய்மைப் படுத்துங்கள் என்ற செய்தியையும் சேர்த்து கொண்டு போகியைக் கொண்டாட இணையத்தில் பதிவுகள் இடப்படுகின்றன.

இன்று வீட்டை தூய்மைப் படுத்தி, பொருட்களை முறையாக அடுக்கி வைத்து, புதிய பொருட்களுக்கு இடம் ஒதுக்குவது எல்லாம்செய்யும் நாளாகும். மாலையில் வீட்டிற்கு பீளைப்பூ, ஆவரைப்பூ, வேம்பு கொண்டு காப்பு கட்டுவார்கள். 

போகித்திருவிழாவை வீட்டைத் தூய்மைப்படுத்துதல், பொருட்களைச் சீர் படுத்துதல், காப்புக்கட்டுதல் ஆகிய நிகழ்வுகளோடு நிறைவு செய்வோம். போகித்திருநாள் வாழ்த்துக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.