Show all

வைரமுத்து சாடல்! காவிரிக்கு ஈரவஞ்சனை; தமிழுக்கும் ஓரவஞ்சனையா?

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது கீச்சு பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, செம்மொழி தமிழுக்கு விருதில்லையா? நடுவண் அரசுக்கு மனமில்லையா? காவிரிக்கு ஈரவஞ்சனை; தமிழுக்கும் ஓரவஞ்சனையா? கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,773.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.