Show all

மழை, மின்னல் நேரத்தில் செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் பலி

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய்நகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் அகவை19. தொழிற்பயிற்சி கல்வி படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அனகாபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிஷோர் அகவை17. தொழிற்பயிற்சி கல்வி மாணவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு அனகாபுத்தூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இரவு 9 மணிக்கு லோகேசின் வீட்டுக்கு கிஷோர் சென்றார். இருவரும் 2-வது மாடியில் நின்று செல்பேசியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்;துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் சோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-செல்பேசி எவ்வளவுகெவ்வளவு பயன்பாடு மிகுந்ததோ அவ்வளவுக்கவ்வளவு ஆபத்தானது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.