Show all

இரட்டை இலை யாருக்கு! இன்று தெரிந்து விடுமாம்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வியுடன் காத்திருக்கும் அதிமுகவினர் ஆவலோடு எதிர்பார்க்கும் இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்று இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சின்னம் யாருக்கு என்ற விசாரணையை முடித்த தேர்தல் ஆணையம் ஆளும் முதலமைச்சர் தரப்புக்கு அதிக பிரதிநிதிகளின் ஆதரவு இருப்பதாகச் சொல்லி சின்னத்தை கொடுத்தது. குறுகிய காலத்தில் பீஹாரைச் முதல்வர் நிதிஷ்குமார் கட்சியின் சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடிந்தது.

ஆனால், இரட்டை இலை விவகாரத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

இரு தரப்பினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்துள்ள நிலையில், சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என இரு தரப்பினரும் நம்பிக்கையுடன் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருக்கும் இரு அணிகளின் சண்டைக்கு இனி மாற்று வடிவம் தேவைப் படும் என்று தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.