Show all

திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

     தடையை மீறி இந்நிகழ்ச்சியை நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

     புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நான்கு பேரும், குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

     இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிவடைந்தும் மீண்டும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் அறங்கூற்று மன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.