Show all

வைகோ பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்.

     அப்போது திடீரென அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வைகோவை தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

     மயக்கம் தெளிந்து வைகோ மீண்டும் மேடையில் உரையாற்றினார். வைகோ பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.