Show all

தமிழர்கள் முகத்தில் காவி அப்ப முயலும் பொன்.ராதாகிருஷ்ணன்

‘மைல்கல்லில் பூச எடுக்கும் பெயின்ட்டை, உங்களது முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுகிறார்.

     தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில், ஊர்ப் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். தற்போது மோடி பாஜக அரசு, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியில் எழுதி வருகிறது.

     இதற்கு, தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘மைல்கல்லில் உள்ள இந்தி மொழியை அழிப்பதற்கு எடுக்கும் பெயின்ட்டை, உங்களது மூஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்’ என்று என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.

     தமிழர்களின் மொழி வாழ்வாதாரம் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மோடி பாஜக அரசுக்கு எதிராக தமிழர்கள் உணர்ச்சி வசப்படுவதில் பொருள் இருக்கிறது: தமிழர்களுக்கு எதிராக பதவி சுகத்திற்காக சோரம் போகும் இந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன உணர்ச்சி வசப்படவேண்டிய தேவையிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.