Show all

மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் கருவி பொருத்தம்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது. தொடர்வண்டி பாதைகளில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதால், தொடர்வண்டியின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

90 கி.மீக்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ தொடர்வண்டிசேவை நிறுத்தப்படும் என்றும் 70 கி.மீ க்கு மேல் இருந்தால், தொடர்வண்டியின் வேகம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ தொடர்வண்டி நிலைய சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.