Show all

விடுதிக்குத் தீவைப்பு, சத்யபாமா பல்கலைகழகத்தில் பரபரப்பு, மாணவி தற்கொலை எதிரொலி

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை செம்மஞ்சேரி அருகே சத்யபாமா பல்கலைகழகம் உள்ளது. இங்கு நடந்த தேர்வில் முதலாம் ஆண்டு படித்து வரும் ராகமோனிகா என்ற மாணவி காப்பியடித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியை ஆசிரியர்கள் கண்டித்ததால் மன வேதனையடைந்து விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான பல்கலை கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள், இன்று இரவு பல்கலைகழக அலுவலகம் முன்புபோராட்டம் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து விடுதிக்குள் தீவைப்பு சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பல்கலைகழக நிர்வாகத்தினர் மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முன்னேற்றமும் எட்டவில்லை.

இதை அடுத்து மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்து படுக்கைகள் மின் விளக்குகளுக்கு தீ வைத்தனர். அலுவலகம் மற்றும் விடுதியில் ஏற்பட்ட தீ யை தடுப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விடுதியில் பரபரப்பு காணப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.