Show all

நிலம் கையகப்படுத்த வந்த நிலக்கரி குழும வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று  நிலக்கரி குழும நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கிடைத்த தகவலால் அதிர்ச்சியடைந்த ஆதனூர் கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

     இதற்கிடையில் இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆதனூர் வந்த்.சி நிலக்கரி குழும அதிகாரிகளை பொதுமக்கள் விரட்டியடித்தனர். மேலும் அவர்களது வாகனத்தையும் பொதுமக்கள் சேதப்படுத்தினர். இது தொடர்பாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

     மோடி! தேடி தேடி தமிழக வளம் சுரண்டும் நோக்கம் தமிழ் மக்களுக்கு புரிந்து விட்டது; இனி ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.