Show all

நல்ல குடும்பத்துல பிறந்தவங்க யாரும் இத பண்ண மாட்டாங்க - செந்தில்

சில வாரங்களாகவே நகைச்சுவை நடிகர் செந்தில் இறந்த விட்டதாக சமூக வலைதளங்களிலும் , வாட்ஸ் அப் களிலும் வதந்திகள் வெளியானது.இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தும் , நேரில் சென்று நலம் விசாரித்தும் வந்தனர்.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் செந்தில் அதிமுக கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.இதனாலேயே, தி.மு.க வினை சேர்ந்த சிலர் தான் இந்த வதந்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என செந்தில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

 

இதனை தான் முதலில் பொறுத்துக்கொண்டதாகவும் அவர்கள் விடாமல் திரும்ப திரும்ப பரப்பி வந்ததால் தான் நான் புகார் கொடுத்துள்ளேன் எனவும் , நல்ல குடும்பத்துல பிறந்தவங்க யாரும் இத பண்ண மாட்டாங்க எனவும் செந்தில் கொந்தளித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.