Show all

சமுக வலைதளங்களில் அல்லோகல்லோலப்பட்ட நடிகர் சூர்யா விளக்கம்

தன்னால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கால்பந்தாட்ட வீரரின் புகாருக்கு நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

 நடிகர் சூர்யாவுக்கும், கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமார் தரப்புக்கும் சென்னை அடையாறில் திங்கள்கிழமை நடந்த பிரச்னையில், சூர்யா மீது சாஸ்திரி நகர் போலீஸிடம் புகார் தரப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக நடிகர் சூர்யா சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:-

 சம்பவத்தில் தொடர்புடைய அந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வயதான பெண்ணை மோட்டார் சைக்கிளில் இடித்தனர்.

 இடித்ததோடு மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர். அப்போது அந்த வழியே சென்ற சூர்யா, காரை நிறுத்தி இந்த இளைஞர்களை கேள்வி கேட்டுள்ளார்.

 உடனே, அதுகுறித்து காவல் துறையிடமும் தகவல் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவருக்கு எதிராக இந்த இளைஞர்கள் இருவரும் புகார் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.