Show all

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சுரேஷ் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்

சேலையூரை அடுத்த அகரம்தென் சத்யா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் எஸ்.சுரேஷ்(17). திருவஞ்சேரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவர், தனது நண்பர் மணியுடன் தாம்பரம் செல்ல மாநகர பேருந்தில்(51ஏ) முன்பக்கம் ஏறினார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.

அகரம் தென் அம்பேத்கர் நகர் அருகில் பேருந்து சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி குலுங்கியபோது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சுரேஷ் எதிர்பாராதவிதமாகத் தடுமாறி தவறி கீழே விழுந்தான். அப்போது பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கிய சுரேஷ், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவல் அறிந்து விரைந்து வந்த  போக்குவரத்து போலீசார் சுரேஷ் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்து பேருந்து டிரைவர் ஜபருல்லா பாட்ஷாவிடம் விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.