நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு பதிகை செய்த ஒருவர் வைப்புத் தொகையை சில்லறையாகக் கொடுத்தார். 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சுயேட்சை வேட்பாளர்கள் நூதனமாக எதையாவது செய்வார்கள், அந்த வகையில் இந்தத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு பதிகை செய்த ஒருவர் தனது வைப்புத் தொகையை சில்லரை நாணயங்களாக கட்டினார். குப்பல்ஜி தேவதாஸ் என்னும் அந்த வேட்பாளர் தனது வேட்புமனுவுடன் செலுத்த வேண்டிய வைப்புத் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார். சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் நிற்கும்போது 'அனைவரும் நேர்மையற்றவர்கள்' 'நான் நேர்மையானவன்' என்று நிற்பார்கள். சந்தர்பவசத்தால் வெற்றி பெற்று விட்டால் இவர்கள் எந்தக் கட்சிகளை விமர்சித்தாரோ அந்தக் கட்சியில் ஒன்றையே ஆதரிக்கத் தேர்வு செய்வார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன், கடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி, செயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு வரும் இவர், இம்முறை தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு பதிகை செய்தார். இது இவருடைய இருநூறாவது வேட்புமனு தாக்கல் என்பதும் இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கவும் முயற்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஒரு முறை நரசிம்மராவை எதிர்த்து வேட்புமனு பதிகை செய்தபோது தான் கடத்தப்பட்டதாக பத்மராஜன் தெரிவிக்கிறார். இப்படியாக சுயேச்சை வேட்பாளர்கள் விநோதமாக எதையாவது செய்து மக்கள் கவனத்தை ஈர்ப்பது சுயேட்சைகள் குறித்த வரலாறு ஆகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,102.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.