சீமான் என பெயர் வைத்திருக்கும் பரதேசிக்கெல்லாம் பதில் சொல்ல
வேண்டிய அவசியம் கிடையாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசமாக
பேசினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ்
இளங்கோவன் எந்த வகையில் ஜெயலலிதா கருத்துப் பரப்புதல் செய்தாலும் தேர்தலில் வெற்றி
பெறமுடியாது என தெரிவித்தார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டதாகவும், மக்களை வெயிலில் வாட்டி
வதைத்து கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக
காங்கிரஸ் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி, ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகம் செய்ததாக சீமான் விமர்சித்து
தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது குறித்த கேள்விக்கு, பெயர் அழகாக இருக்கும்; பரதேசிகள் எல்லாம் சீமான் என பெயர் வைத்துக்
கொள்வார்கள். சீமான் என பெயர் வைத்துள்ள பரதேசிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை என இளங்கோவன் ஆவேசமாகக் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.