Show all

பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுக! அமைச்சர் அன்பரசன் தமிழ்நாட்டுப் பெற்றோர் பெருமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

தமிழ்நாட்டில், பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட முன்வராததை நினைக்கும் போது வயிறு எரிவதாக வேதனைத் தெரிவித்தார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன். 

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அவர்களைப் பொறுத்தவரை தமிழ்மொழி மீது தீராத பற்றும் பாசமும் கொண்டவர். தங்கள் வீட்டு பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்டியிருப்பதோடு தன்னைப் பெயர் வைக்குமாறு கட்சியினர் அழைத்தால் அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் அழகான தமிழ்ப் பெயர்களை மட்டுமே சூட்டக்கூடியவர். 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்ப் பெயர்கள் வைக்கும்பாட்டில் சோதிடர்கள் உள்ளிட்ட யார் பேச்சையும் கேட்க வேண்டாம் என்றும், தமிழில் எத்தனையோ அழகான பெயர்கள் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார். 

பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் தாமோ அன்பரசன். 

தமிழ்நாட்டில், பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட முன்வராததை நினைக்கும் போது வயிறு எரிவதாக வேதனைத் தெரிவித்தார் அமைச்சர் தாமோ அன்பரசன். 

தமிழ்மக்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிற நடவடிக்கை போகிற போக்கை பார்த்தால், நாளடைவில் தமிழ்நாட்டில், தமிழ் பெயர்களே மறைந்துவிடுமோ? என்கிற அச்சம் இருப்பதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் கூட தாம் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் 50 மாணவர்களிடம் பெயர்களை கேட்டபோது அதில் 4 மாணவர்கள் பெயர்கள் மட்டுமே தமிழில் இருந்ததாகவும் மற்ற பெயர்கள் எல்லாம் மற்ற மொழிகளில் இருந்து வைக்கப்பட்டிருந்தது எனவும் கவலை தெரிவித்தார் அமைச்சர் தாமோ அன்பரசன். 

தமிழ்ப் பெயர்களை மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் அழிய விட்டுவிடக் கூடாது என உருக்கமுடன் பெற்றோர்களுக்குக் கோரிக்கை விடுத்த அவர், நீங்கள் எத்தனை மொழிகளைப் படித்தாலும்- உங்கள் எண்ணமொழியாக, உங்கள் சிந்தனை மொழியாக தமிழே இருந்து, உங்கள் உயரத்தை தமிழ் ஏணிப்படியாக நின்று தாங்கிப் பிடிக்கிறது என்று தமிழின் அருமை பெருமைகளைத் தெளிவுபடுத்திப் பேசினார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,399.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.