Show all

புதியபார்வை ஆசிரியர், ம.நடராசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதியபார்வை இதழாசிரியர் ம.நடராசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அவரது மனைவி சசிகலா சிறைவிடுப்பில் வருவார் என்று கூறப்படுகிறது.   கடந்த ஆண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் ம.நடராசன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதையடுத்து உடல்நலன் தேறினார். ஒரே மாதத்தில் நடராசன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் தான் வழக்கமாக வசிக்கும் வீட்டில் இருக்காமல், உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார் நடராசன். 

இந்நிலையில் இன்று திடீரென ம. நடராசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராசனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் நடராசனை பார்க்க சசிகலா சிறைவிடுப்பில் வர வாய்ப்பிருப்பதாகவும், சிறைவிடுப்பு கேட்டு சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,729.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.