Show all

ஹிந்துத்தவா ராஜா சொன்னபடி பெரியார் சிலை உடைப்பு! பாஜக பிரமுகரைக் கட்டி வைத்து உதைத்தனர் பொதுமக்கள்

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பத்தூரில் பெரியார் சிலையை ஹிந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனைப் பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.

தமிழகத்தில் பெரியார் சிலையைத் தகர்ப்போம் என ஹிந்துத்தவா ராஜா கீச்சுவில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ, களவாணிகளைப் போல இரவில் உடைக்காமல் பகலில் நேரம் குறித்துவிட்டு வாருங்கள். கை கால்களை துண்டாக்குவோம் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை ஹிந்துத்துவா அமைப்பினர் இரவில் உடைத்துள்ளனர்.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பெரியார் சிலையை அந்த விஷமிகள் உடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகைக்கும் சிலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.