இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, மலேசியா, இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் விளையாடும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திடம் 1-1 என டிரா செய்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியிலும் 2-4 என தோல்வியை தழுவியது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா நாளை நடைபெறும் போட்டியில் மலேசியாவையும், 9-ந்தேதி நடைபெறும் போட்டியில் அயர்லாந்தையும் எதிர்கொள்ள இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.