Show all

தவான் மிரட்டல் ஆட்டம் வீண்: முதல் T20 போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  4 விக்கெட் இழப்பிற்கு  174 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 90 ரன்களும், பாண்டே மற்றும் 37 ரன்களும் மற்றும் குவித்தனர். ரிஷாப் பந்து  23 ரன்களுடனும் மற்றும் தினேஷ் கார்த்திக் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இதை தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் பெரேரா 66 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாகல் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெயதேவ் உனட்கட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வரும் 8 ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.