Show all

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் திருச்சி அருகே சாலைவிபத்து - 14பேர் பலி

திருச்சி அருகே  லாரி மீது  அரசுப்பேருந்து  மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

சென்னையிலிருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி வழியாக நாகர்கோவில் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகே இருங்களூர் என்கிற இடத்தில் அந்த  பேருந்து கொண்டிருந்தபோது, சாலை ஓரம் இரும்பு கம்பிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் அரசு பேருந்து பலத்த சேதம் அடைந்தது.

பேருந்தில் பயணித்த பயணிகள் 10 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையிலும், அருகே இருந்த தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.