Show all

தேர்தலை எதிர்கொள்ள தயார் – தமிழிசை

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பதுக்கலை தடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதாவின் ஆலோசனைக் கூட்டத்தில், திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள பாரதிய ஜனதா தயாராக இருப்பதாகக் கூறினார். சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.