தாய் மொழி ஒன்று போதும். உலகின் கலைச் செல்வங்கள் யாவையும் நம் தாய் மொழிக்கு மாற்றம் செய்து பயன் பெற முடியும். மோடிக்கு கோபமாக அவர் விரும்பும் ஹிந்தி மொழியிலேயே ஒரு மடல் எழுத வேண்டுமா எழுதுங்களேன் கூகுள் மூலம். मोदी! आपको कावेरी प्रबंधन बोर्ड स्थापित करना होगा। यह सर्वोच्च न्यायालय है ;; आदेश। आपने कावेरी प्रबंधन बोर्ड स्थापित नहीं किया है। यह एक नागरिक अपराध है। मेरे पड़ोसी, अगला दरवाजा नागरिक अपराधियों है। जेल में हैं; उन्हें दंड क्यों दिया जाता है? मोदी सोचो! हम आपको शासन करने का अधिकार दे रहे हैं। आप कानून का सम्मान नहीं करते हैं। आपके पास शासन करने का अधिकार नहीं है। இங்கே 'தாய்மொழி ஒன்று போதும்' என்கிற தொடரை கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியோடு ஒன்பது மொழிகளில் மொழிமாற்றம் செய்துள்ளேன். 1.தாய் மொழி ஒன்று போதும் :தமிழ் 2. एक मातृभाषा पर्याप्त है :HINDI 3. Dum enim una lingua Thai :LATIN 4. ماں کی زبان کافی ہے :URUDU 5. একটি মাতৃভাষা যথেষ্ট :BENGALI 6. ഒരു മാതൃ ഭാഷ മതി :MALAYALAM 7. මව් භාෂාවක් ප්රමාණවත්ය :SINGALAM 8. માતૃભાષા પૂરતી છે :KUJARATI 9. Mother tongue only is enough :ENGLISH
ஆக எந்த ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும்- தாய் மொழியும் முயற்சியுமே தேவை. இந்த இரண்டும் இருந்தால் உலகின் எந்த மொழியில் வெளி வருகிற தகவலையும் நம் மொழிக்கு மாற்றம் செய்து கொள்ளும் வகையாக தகவல் தொழிற் நுட்பம் வளர்ந்திருக்கிறது.
'தாய்மொழி ஒன்று போதும்' என்கிற தொடரை கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியோடு ஒன்பது மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறேன். உலக மொழிகள் அனைத்திற்கும் இது சாத்தியம்.
வேண்டுமானால் உங்களுக்கு இன்னும் சில முகநூல் கணக்குகளையோ, கீச்சுக் கணக்குகளையோ நீங்கள் விரும்பும் மொழிகளில் தொடங்கி அந்த மொழி மக்களோடு பண்பாட்டுத் தொடர்புகளையோ, வணிகத் தொடர்புகளையே நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
நீங்கள் எவ்வளவு பெரிய முதலாளி ஆவதற்கும் உங்களுக்கு தாய் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரிய வேண்டியத் தேவையில்லை. தகவல் தொழிற் நுட்ப வளர்ச்சியில் கூகுள் மூலமே எல்லாம் உங்களுக்கு சாத்தியம்.
வேறு மொழியை உங்கள் மீது திணக்கிறவன் உங்களை அவனுடைய அடிமையாக்கிக் கொள்ள முயல்கிறான் என்பதே உண்மை. உங்கள் கருத்தை உங்கள் மொழியிலேயே அவனுக்குச் சொல்லலாம். அவனுடைய மொழிக்கு மாற்றம் செய்தும் அவனுக்குச் சொல்லலாம்.
மோடி அவர்களே!
நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அது உச்ச நீதிமன்றத்தின் ஆணை. நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. அது சிவில் குற்றம்.
என் பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த வீட்டுக்காரர் சிவில் குற்றவாளிகள். சிறையில் இருக்கிறார்கள. அவர்களுக்கு ஏன் தண்டனை.
யோசியுங்கள் மோடி! ஆளுகிற உரிமை உங்களுக்கு நாங்கள் கொடுத்து இருக்கிறோம். நீங்கள் சட்டத்தை மதிக்கவில்லை. உங்களுக்கு ஆளும் உரிமை இல்லை.
இந்த மடலை கூகுள் மூலம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்திருக்கிறேன்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.