இயக்குநர் வெற்றி மாறன் மூன்று பாகங்களாக எடுக்கும் வட சென்னை
படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனுஷ் நடிக்கும் இந்தப் படம் இரு பாகங்களாக வெளிவரும் என முதலில்
சொல்லப்பட்டது. ஆனால், பூஜை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், வட சென்னை மூன்று பாகங்களாக
வெளிவரும் என்று அறிவித்தார். இதனிடையே சமந்தா முதல் பாகத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவித்துள்ளதாகத்
தெரிகிறது. மூன்று பாகம் என்பதால் நிச்சயம் இரண்டு வருடங்கள் படப்பிடிப்பு
நடைபெறும். எனவே கால்ஷீட் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்காக வடசென்னை
படத்திலிருந்து சமந்தா விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவுக்குப் பதிலாக
அவர் வேடத்தில் அமலா பால் நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.