25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தினகரன் திருவண்ணாமலை வந்தார். என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட வைரமாக மாற்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சோதனையை 3 நாட்களாக நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. என் வீட்டில் பாதாள அறையும் இல்லை. எந்த நகையும் இல்லை. என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட அவர்கள் வைரமாக மாற்றிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் வழக்கமாக சாப்பிடும் உணவகங்களைக் கூட வைக்கவில்லை. அங்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார் தினகரன். இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, நான் காந்தியின் பேரனும் அல்ல; கோட்சேவின் வழித்தோன்றலும் அல்ல என்று பதிலளித்தார். கைது நடவடிக்கை இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,603
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.