Show all

மோடி வந்தார்; கருணாநிதியையும் சந்தித்தார்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி வந்ததோ. கருணாநிதியைச் சந்தித்ததோ தமிழகத்தைப் பொறுத்தவரை உப்பு சப்பு இல்லாத விசயம்.

தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொள்ள தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நேற்று சென்னைக்கு வந்தார். பின்பு, தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் இந்த இரண்டு நிகழ்வுகளும் பெரிதாக சமூக வலைதளங்களில் பேசப் படவில்லை.

தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் மோடி. பவள விழா நிகழ்ச்சிக்கு வரவிருந்த நாளில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைச் சந்திக்கும் நிகழ்வும் அவரது பயணப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மோடியின் வருகைக்காகக் கோபாலபுர இல்லத்தில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது.

தந்தி பவள விழாவில் கலந்துகொண்ட மோடி, பின்னர் அங்கிருந்து கிளம்பியவர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வந்துசேர்ந்தார்.

மு.க.ஸ்டாலின், அவரை சால்வை அணிவித்து வரவேற்றார். கனிமொழியும் சால்வை கொடுத்து வரவேற்றார். வரவேற்பு முடிந்தவுடன் மோடியை கருணாநிதி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார் ஸ்டாலின். அதற்கு முன்னர், ராசாத்தி அம்மாள் மற்றும் தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்தார் மோடி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,599

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.