Show all

விசாலுக்கு வீசப்படுகிறதா தூண்டில்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 இராதாகிருட்டினன் நகரில் விசாலை நிறுத்தி அரசியலில் ஆழம் பார்க்க கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. செயலலிதா மறைவுக்கு பின்னர் முதலில் கீச்சிலும் இப்போது களத்திலும் அரசியலில் இறங்குவதற்கான ஆழ்ம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.

நேற்று வெளியிட்ட கீச்சுவில் விரைவில் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் இராதாகிருட்டினன் நகர் இடைதேர்தலில் விசாலைக் களம் இறக்க கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. விசாலின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஒரு கணக்கெடுப்பு எடுத்து வருகிறார்கள். அந்தக் கணக்கெடுப்பு இராதாகிருட்டினன் நகர் இடைதேர்தலைக் குறி வைத்து எடுத்து வருகிறார்களாம். வியூகம் அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவதில் விசால் வல்லவர். எனவே முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கமல் விசாலைக் களம் இறக்க முயற்சிக்கிறார் என்கிறார்கள்.

இதற்கிடையே விசாலை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பும் முயற்சித்து வருகிறதாம்.

இது அரசியலுக்கு தகுந்த நேரம் இல்லை என்று விசாலுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் சொல்லி வருகின்றனர். என்ன செய்யப் போகிறார் விசால்.

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.