Show all

இரா.கி.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட 139 பேருக்கு மின்மினிப் பேச்சாளர் அனுமதி

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலில் கருத்துப்பரப்புதல் செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மின்மினிப் பேச்சாளர்களின் பெயரை பதிவு செய்ய ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. பெயர் பதிவு செய்திருந்தால், அவர்கள் மேற்கொள்ளும் பயணச் செலவு, வாகனப் போக்குவரத்துச் செலவு போன்றவை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாது. அந்த வகையில், 139 பேரின் பெயர், மின்மினிப் பேச்சாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 19 பேருக்கு மின்மினிப்; பேச்சாளர் அனுமதி தரப்பட்டுள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்பட 40 பேர் மின்மினிப் பேச்சாளர்களாக தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்பட 31 அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி, துணை பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மின்மினிப் பேச்சாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பா.ஜ.க. சார்பிலும் தேசியத்தலைவர் அமித்ஷா, மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், வானதி சீனிவாசன் உள்பட 40 பேர். தேர்தல் பிரசாரத்துக்காக இவர்கள் மேற்கொள்ளும் பயணச் செலவுகள், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரின் கணக்கில் சேராது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.