Show all

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கெதிராக தொடரும் போராட்டங்களின் தாக்கம்

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கெதிராக தொடரும் தமிழகப்;;; போராட்டங்களின் தாக்கமாக,

தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

காவிரி; விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் பல்வேறு கட்சிகளும், தன்னார்வலர்களும், உழவர்களும், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி முடிக்கப் பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.  

நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சாலை மறியல், கண்டன போராட்டங்களை, நாம்தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை இயக்கம், மே பதினேழு இயக்கம், திரைப்பட இயக்குநர்களால் தொடங்கப் பட்ட தமிழ்ப் பண்பாட்டு கலை இலக்கிய பேரவை, மற்றும் தன்னார்வலர்கள், உழவர்களால் நடத்தப் பட்டதால் சென்னை அண்ணா சாலையில் போக்கு வரத்து முழுமையாக முடங்கிப் போனது. 

இவ்வாறக தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,754.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.