Show all

தமிழ்நாட்டில் இன்னும் நான்கு நாட்கள் மழை தொடரும்!

வடமேற்கு திசையில் நகர்கிறது அசானி புயல். தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்.

28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிப்பதாவது.

அசானி தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய நடு மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு - வடகிழக்கு திசையில் வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய நடு மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும்.

இதன்காரணமாக இன்றைய நாள் உட்பட நான்கு நாட்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்ய வாய்ப்புள்ளது என்பதாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,245.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.