Show all

பட்டாசு ஆலையில் தீ! 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கதி என்ன என்று தெரியவில்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணபுரத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற் பட்ட அறைகள் உள்ளன. இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள்  பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் பட்டாசு தயாரிக்கும்போது திடீரென மருந்துகள் உரசி வெடித்து தீ பற்றியது. 

 

தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. மற்ற அறைகளுக்கும் தீ பரவியது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடம் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

 

இதையடுத்து விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த அறைகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.