Show all

தினகரன், இரட்டை இலைக்காக டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டதற்கு எதிராக தினகரன் டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என டெல்லி உயர்அறங்கூற்று மன்றம் கூறியுள்ளது. முன்னதாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி-பன்னீர் அணிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியது. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

தினகரன் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்ததுமே தற்காப்புக்காக உச்சஅறங்கூற்று மன்றத்தில் பன்னீர் தரப்பிலும், டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் பன்னீர் மற்றும் பழனி சார்பில் தனித்தனியாக முன்னெச்சரிக்கை மனு பதிகை செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விகாரத்தில் டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு மனுவை பதிகை செய்துள்ள தினகரன், அந்த மனுவில் இரட்டை இலை தொடர்பாக எங்கள் வாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இரட்டை இலையை பழனி-பன்னீர் தரப்பிற்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி தேர்தல் ஆணைய உத்தரவு செல்லாது என்றும் இராதாகிருட்டினன் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிட தமக்கு அனுமதி தரவும் கோரிக்கை வைத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.