Show all

திமுக அடுத்த போராட்டம்! குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்புதல்+ 'காவிரி உரிமை மீட்புப் பயணம்'

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கர்நாடகவை ஆளும் காங்கிரசுடன், கைகோர்த்துக்;; கொண்டு சட்ட மறுப்பு இயக்கம் நடத்திக்;; கொண்டிருக்கும் நடுவண் அரசை ஆளும் தேசத் துரோக பாஜகவைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்குகிறார். மற்றொரு பயணம் அரியலூரில் இருந்து திங்கட் கிழமை தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று ஸ்டாலின் தனது கீச்சு பக்கத்தில், காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி 'காவிரி உரிமை மீட்புப் பயணம்' தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்கவிருக்கிறேன். நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம்.

இந்தப் பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வழிநெடுக உள்ள உழவர்கள், பொதுமக்களிடம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.