Show all

தம் மீது சேற்றை வாரி பூசிக் கொள்வதில் திமுகவிற்கு நிகர் திமுக தாம்

சட்டப்பேரவையில் நேற்று வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்றஉறுப்பினர் கருணாஸ் பேசும்போது, மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தியாகராஜன், ஆங்கிலத்தில் உரையாற்றியது தொடர்பான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கருணாஸ் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு திமுக தரப்பில் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான விவாதம்: மு.க.ஸ்டாலின்: கருணாஸ் ஏதோ கற்பனையாக பேசுகிறார். அவர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். பேரவைத் தலைவர்: அவர் பேசியதும், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பை பதிவு செய்ததும் அவைக்குறிப்பில் இருக்கும். அதை அப்படியே விட்டுவிடுங்கள் மீண்டும் கருணாஸை அவைத் தலைவர் பேச அழைத்தார். அவர் சங்கம் வளர்த்த மதுரையில் என பேசத் தொடங்கினார். மீண்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். துரைமுருகன்: இந்த அவையில் நீங்கள் அனுமதித்தால் தெலுங்கில் கூட பேசலாம். ஆனால், தியாகராஜன் பேசியதை விமர்சிக்கக் கூடாது. பேரவைத் தலைவர் தனபால்: கருணாஸ் பேசியது அவையில் பயன்படுத்தக்கூடாத சொற்கள் அல்ல. இதில், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவருடைய எதிர்ப்பும் பதிவு செய்யப்படும். மு.க.ஸ்டாலின்: கருணாஸ் கூறுவது, தியாகராஜன் பேச்சை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. கடந்த முறை காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் பேசியபோது, முதல்வரும் அவருக்கு தெலுங்கிலேயே பதிலளித்தார். அதை விமர்சிக்கலாமா? சட்டப் பேரவை விதிகளில் அத்தியாயம் 14ல், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வாதத்தை எடுத்து வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. துரைமுருகன்: இந்த அவைக்கு கருணாஸ் புதியவர். இவர் இவ்வாறு இன்னொரு உறுப்பினரைப் புண்படுத்துவது நியாயமா? பேரவைத் தலைவர் தனபால்: கருணாஸ் பேசக்கூடாத சொற்களை பேசவில்லை. உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளேன். எனவே அவர் பேசியதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. கருணாஸுக்கு தியாகராஜனே பதிலளிக்கலாம். பழனிவேல் தியாகராஜன் (திமுக): தமிழில் உள்ள நுட்பமான வார்த்தைகள் எனக்கு தெரியாது. நான் பொருளாதாரம் படித்தபோது, ஆங்கிலத்தில் படித்தேன். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசினேன். கருணாஸுடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு விவாதம் நடந்தது.கொள்வதில் திமுகவிற்கு நிகர் திமுக தாம் சட்டப்பேரவையில் நேற்று வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்றஉறுப்பினர் கருணாஸ் பேசும்போது, மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தியாகராஜன், ஆங்கிலத்தில் உரையாற்றியது தொடர்பான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கருணாஸ் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு திமுக தரப்பில் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான விவாதம்: மு.க.ஸ்டாலின்: கருணாஸ் ஏதோ கற்பனையாக பேசுகிறார். அவர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். பேரவைத் தலைவர்: அவர் பேசியதும், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பை பதிவு செய்ததும் அவைக்குறிப்பில் இருக்கும். அதை அப்படியே விட்டுவிடுங்கள் மீண்டும் கருணாஸை அவைத் தலைவர் பேச அழைத்தார். அவர் சங்கம் வளர்த்த மதுரையில் என பேசத் தொடங்கினார். மீண்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். துரைமுருகன்: இந்த அவையில் நீங்கள் அனுமதித்தால் தெலுங்கில் கூட பேசலாம். ஆனால், தியாகராஜன் பேசியதை விமர்சிக்கக் கூடாது. பேரவைத் தலைவர் தனபால்: கருணாஸ் பேசியது அவையில் பயன்படுத்தக்கூடாத சொற்கள் அல்ல. இதில், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவருடைய எதிர்ப்பும் பதிவு செய்யப்படும். மு.க.ஸ்டாலின்: கருணாஸ் கூறுவது, தியாகராஜன் பேச்சை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. கடந்த முறை காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் பேசியபோது, முதல்வரும் அவருக்கு தெலுங்கிலேயே பதிலளித்தார். அதை விமர்சிக்கலாமா? சட்டப் பேரவை விதிகளில் அத்தியாயம் 14ல், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வாதத்தை எடுத்து வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. துரைமுருகன்: இந்த அவைக்கு கருணாஸ் புதியவர். இவர் இவ்வாறு இன்னொரு உறுப்பினரைப் புண்படுத்துவது நியாயமா? பேரவைத் தலைவர் தனபால்: கருணாஸ் பேசக்கூடாத சொற்களை பேசவில்லை. உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளேன். எனவே அவர் பேசியதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. கருணாஸுக்கு தியாகராஜனே பதிலளிக்கலாம். பழனிவேல் தியாகராஜன் (திமுக): தமிழில் உள்ள நுட்பமான வார்த்தைகள் எனக்கு தெரியாது. நான் பொருளாதாரம் படித்தபோது, ஆங்கிலத்தில் படித்தேன். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசினேன். கருணாஸுடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.