Show all

ஹிந்துத்துவா ராஜாவைக் கைது செய்ய கோவை காவல் ஆணையரிடம் புகார்

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹிந்துத்துவா.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹந்துத்துவா ராஜா நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப் படும் என்று தெரிவித்திருந்தார்.

ஹந்துத்துவா ராஜாவின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. வன்முறைக்கும் மோதலுக்கும் வழிவகுக்கும் ஹந்துத்துவா ராஜாவை கைது செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், ஜவாகிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். 

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், பெரியார் சிலை இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட ஹந்துத்துவா ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.