Show all

வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்குத் தடை! பழமையான கட்டுமானம் பாதிக்கும் வகையாக, தஞ்சை பெரிய கோவிலில் நடத்த முயன்றதால்

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரைக்கிளை உயர் அறங்கூற்று மன்றம், தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது.

ஆன்மீகப் பயிற்சி நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதனால், பழமையான கட்டுமானம் பாதிக்கப்படுவதாக கூறி, இதற்க்குத் தடை கோரி, மதுரைக்கிளை உயர் அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது.

இன்று பிற்பகலில் மனுவை விசாரித்த மதுரைக்கிளை உயர் அறங்கூற்று மன்றம், தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் கோவிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று கூறி தடை விதித்தது

யமுனை ஆற்றின் கரையில் இது போன்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டதாக கூறி, பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததை மதுரைக்கிளை உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் வரும் திங்கட் கிழமை பதிலளிக்க வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.