Show all

சிதம்பரம் ஆடலரசன் கோயில்! பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய, தீட்சிதர்கள் விதித்த தடை

அண்மையில் தீட்சிதர்கள் நிர்வாகம், இக்கோவிலில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய தடை விதித்தனர். இதை அறிந்த தமிழ்நாடு அரசு, கோவில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் அருட்காட்சி செய்ய அனுமதி அளித்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழ்நாடு அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதியை தமிழ்நாடு அரசு நியமித்தது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ஆடலரசன் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. 

தீட்சிதர்அல்லது தில்லைவாழ் அந்தனர் என்பவர் தமிழ்நாட்டின் வேத சைவ பார்ப்பனிய சமூகமாகும். அவர்கள் முதன்மையாக சிதம்பரம் நகரத்தின் ஆடலரசன் கோயிலை மையமாகக் கொண்டவர்கள்; அவர்கள் முதலில் சோழர் ஆட்சிகாலத்தில் சடங்கு செய்பவர்களாக இருந்தனர். சடங்கு முறையில் அடுத்தடுத்த மன்னர்களுக்கு முடிசூட்டினர்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது கோயில் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. அதனடிப்படையில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்துவருகின்றனர். 

அண்மையில் தீட்சிதர்கள் நிர்வாகம், இக்கோவிலில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய தடை விதித்தனர். இதை அறிந்த தமிழ்நாடு அரசு, கோவில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் அருட்காட்சி செய்ய அனுமதி அளித்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழ்நாடு அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதியை தமிழ்நாடு அரசு நியமித்தது.

தற்போது திமுக அரசு பக்தர்கள் பென்னம்பலம் மீது ஏறி நின்று செய்யும் அருட்காட்சிக்கு சட்ட நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில்தான், கோயிலில் ஆய்வு நடத்தப்படும் என்றும், கோயிலின் கடந்த எட்டாண்டு கணக்கு வழக்குகள் மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்களைத் தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு தமிழ்நாடு அறநிலையத்துறை கவனஅறிக்கை அனுப்பியது.

அந்தக் கவனஅறிக்கையில் சட்டப்பாடாக கோயிலில் அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்போவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கவனஅறிக்கைக்கு விடையளித்;த தீட்சிதர்கள், உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாடு அறநிலையத்துறை எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று விடையளித்திருந்தனர். 

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முந்தாநாள் சிதம்பரம் ஆடலரசன் கோயிலுக்குச் சென்றார். அவரை வரவேற்ற தீட்சிதர்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவர்களுடன் சென்ற அமைச்சர் பென்னம்பலம் மீது ஏறி நின்று ஆடலரசனை அருட்காட்சி செய்தார். 

அதையடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசினார். அப்போது கோயிலின் நிர்வாகம், பூசை முறைகள் குறித்து அமைச்சருக்கு தீட்சிதர்கள் விளக்கமளித்தனர். அதேபோல கோயிலில் தமிழ்நாடு அறநிலையத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கமளித்தனர். 

அவர்களிடம், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்தும், தமிழ்நாடு அறநிலையத்துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறிய அமைச்சர், எதையுமே தடுப்பதால்தான் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள். கோயிலுக்கு ஆய்வுசெய்ய வரும் குழுவுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, தீட்சிதர்களின் கோரிக்கைகளையும் அரசின் நிலைப்பாடு குறித்தும் பகிர்ந்துகொண்டோம். தமிழ்நாடு அறநிலையத்துறை சட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும், எந்த அளவிலும் சிறு மனச்சங்கடம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் முதல்வரின் அன்பான வேண்டுகோள். சிதம்பரம் ஆடலரசன் கோயில் தொடர்பாக நல்ல ஒரு சுமுக தீர்வு ஏற்படும் என எனக்குத் தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிதம்பரம் ஆடலரசன் கோயிலில் நிர்வாகப்பாடான அலுவல் ஆய்வை மேற்கொள்ள தமிழ்நாடு அறநிலையத்துறை குழு நேற்று காலை கோயிலுக்கு வந்தனர். இந்தக் குழுவில் தமிழ்நாடு அறநிலையத் துறையின் கோயில் நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையரும், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளருமான சி.ஜோதி, பழநி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழு ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களைக் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தீட்சிதர்கள், நீங்கள் சட்டரீதியாக வந்தால் உங்களுக்குக் கணக்கு வழக்குகள் காண்பிக்கப்படும். எங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது. எங்களிடம் கணக்கு வழக்குகள் முறையாக இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் கணக்கு காண்பிக்க முடியாது. நீங்கள் அறங்கூற்றுமன்றம் மூலம் வாருங்கள் என மறுப்பு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பேசிய தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர், கணக்கு வழக்குகளை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்று எந்த அரசாணையும் எங்களுக்கு வரவில்லை. இதற்கான விடையை நாங்கள் முன்பே அளித்துவிட்டோம். நேற்று வந்திருந்த அறநிலையத்துறை அமைச்சரிடம் நாங்கள் கூறிவிட்டோம். நீங்கள் திரும்பிச் செல்லலாம் எனக் கூறினார். 

இதையடுத்து தமிழ்நாடு அறநிலையத்துறை குழுவினர் கோவிலின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்யவில்லை. மாறாக கோவில் உள் மற்றும் வெளி முற்றங்களைப் பார்வையிட்ட குழுவினர் பகல் 1 மணி வரை கோவிலில் இருந்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். பின்னர் மாலை 5.10 மணிக்கு தமிழ்நாடு அறநிலையத்துறை குழுவினர் மீண்டும் ஆடலரசன் கோவிலுக்கு வந்து ஆய்வு சம்பந்தமாக தீட்சிதர்களிடம் பேசினர். அப்போது தீட்சிதர்கள், சட்டப்பாடாக ஆய்வு செய்ய வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்றனர். இதையடுத்து குழுவினர் நாளை (அதாவது இன்று) மீண்டும் ஆய்வு செய்ய வருவதாக கூறிவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பிச்சென்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,273. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.