Show all

அய்யாக்கண்ணுவின் அடுத்தகட்டப் போராட்டம் குமரியில் இருந்து சென்னைக்கு நடைபயணம்

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தேசிய தென்னிந்திய ஆறுகள் இணைப்பு உழவர்கள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வேளாண்பெருமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தென்னிந்திய ஆறுகள் இணைப்பு உழவர்கள் சங்கம் சார்பில், வேளாண்பெருமக்களைத் திரட்டி, எதிர்வரும் 17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (01.01.2018) குமரியில் இருந்து சென்னை வரை நடைபயணமாக சென்று, தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,640

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.