Show all

சல்லிக்கட்டு நடந்திட நடுவண் அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும்

சல்லிக்கட்டு விவகாரத்தில் நடுவண் அரசு சரியான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

     அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

சல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறிய ஜெயந்தி நடராஜன், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல என்றார். பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அதற்காக நடுவண் அரசு சரியான அணுகுமுறையைக் கையாண்டு சட்டப் பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயந்தி நடராஜன் வலியுறுத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.