Show all

செயலலிதா உடலை ஒப்படைக்கக் கோரி, அம்ருதா உயர் அறங்கூற்று மன்றத்தில், நாளை மனு பதிகையாம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செயலலிதாவின் உடலைத் தோண்;டியெடுத்து உடற்கூறு ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த உச்ச அறங்கூற்று மன்றம் மாநில உயர் அறங்கூற்று மன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார்.

செயலலிதாவுக்குப் பிறந்த மகள் தான்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் செயலலிதா உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் வைத்தியநாதன் செயலலிதாவின் மகள் என அம்ருதா உரிமைகோரும் வழக்கில் ஏன் டிஎன்ஏ சோதனை நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் விளம்பரத்துக்காக டிஎன்ஏ சோதனை கேட்பதாக கூறினார். ஒருவருக்கு அனுமதி வழங்கினால் ஆயிரம் பேர் இதுபோல் வருவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் வாரிசா என முடிவு செய்தபின் உடலை ஒப்படைக்க முடிவு செய்யலாம் என்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட விசயம். இதில் விளம்பரம் தேட ஒன்றுமில்லை என்றனர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உரிமை கோராமல் மறைந்த பிறகு ஏன் உரிமை கோருகிறீர்கள் என்றும் மனுதாரரிடம் அறங்கூற்றுவர் வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார். டிஎன்ஏ சோதனை கேட்காத போது எப்படி உத்தரவிட முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அமைதியை பாதிக்கக்கூடாது மேலும் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் தமிழகத்தின் அமைதியை பாதிக்கக்கூடாது என்றும் அறங்கூற்றுவர் கூறினார். இதைத்தொடர்ந்து டிஎன்ஏ சோதனை, உடல் ஒப்படைப்பு தொடர்பாக நாளை மனு பதிகை செய்யப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என நாங்கள் ஆவணங்களை பதிகை செய்கிறோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மாநில முதல்வராக இருந்தவரின் நற்பெயரில் அரசு அக்கறை கொள்கிறது என்றும் அறங்கூற்றுவர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

மேலும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் சென்னை வந்ததை குறிப்பிடாமலேயே மனு பதிகை செய்துள்ளனர் என்றும் அறங்கூற்றுவர் தெரிவித்தார். இதனை காரணம் காட்டியே வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்ற அறங்கூற்றுவர் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.