கோவையில், புதியதாக திறக்கப்பட்ட பெரியார் உணவகத்தின் உரிமையாளரைத் தாக்கியதோடு, உணவகத்;தையும் அடித்து நொறுக்கிய ஆறு போக்கிரிகளைக் காவல்துறையினர் கைது செய்து ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உணவகத்திற்கு வந்த போக்கிரி கும்பல் ஒன்று, பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் மீது தகாத சொல்லாடல் முன்னெடுத்துள்ளனர். மேலும் உணவகத்;தையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர். கடையில் இருந்த உரிமையாளர் பிரபாகரனை கடுமையாக தாக்கிய அந்தக் கும்பல், அங்கிருந்த கடை ஊழியர் அருண் என்பவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்தத் தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அருணுக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார். இந்த அடாவடி தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் என்ற ஆறு போக்கிரிளை காரைமடை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கைதான ஆறு பேர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் அனைவரும் ஹிந்து முன்னணி என்கிற மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசியது, அத்துமீறியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் பகுதியில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நேற்று திறந்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,371.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.