Show all

தீயாய் பரவும் காணொளி! தமிழிசையின் வாயை ஊசி, நூலால் தைத்து புதியமுறை ஆர்ப்பாட்டம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பசுமை தீர்ப்பாய உத்தரவை வைத்துக் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயலும் முயற்சிக்கு எதிராக, ஜெ.தீபா தலைமையிலான எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை முட்டாள்கள் என்று தமிழிசை கூறுவதாக குற்றம்சாட்டு எழுந்தது.

தமிழிசையின் தமிழின விரோதப் போக்கை கண்டித்து, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்கள், தமிழிசை படம்; அச்சிட்ட பதாகையில்;; தமிழிசையின் வாயை ஊசி நூலால் தைத்து, தங்கள் எதிர்ப்பை புதியதொரு முறையில் பதிவு செய்தனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.