Show all

பாஜக சார்ந்த பல்வேறு ஹிந்துத்துவா அமைப்பினர் 50 பேர்கள் பேரணி! ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து, 9 பேரை கைது செய்து, திருச்சி நடுவண் சிறையில் அடைத்துள்ளது. விசாரணை பொறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் கொலைக்கான காரணம் கண்டு பிடிக்கப் படும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பாஜகவினர் ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், கும்பகோணம் பகுதியில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. 

மேலும் ராமலிங்கத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதிப் பேரணி காந்தி பூங்காவில் இருந்து நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர். 

இந்தப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் கும்பகோணம் மகாமக குளம் வீரசைவ மடத்திலிருந்து பாஜகவினர் சுமாராக ஒரு ஐம்பது பேர்கள், தடையை மீறி கும்பகோணம் நகரின் முதன்மை வீதிகள் வழியாக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,061.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.