Show all

செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை

இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தயாநிதி மாறனுக்கு 6 வார காலத்திற்கான இடைக்கால முன்ஜாமீன் வழங்கியிருந்த சென்னை உயர்நீதிமன்றம், திங்கட்கிழமையன்று அதை ரத்துசெய்து உத்தரவிட்டது. அத்தோடு தயாநிதி மாறன் மூன்று நாட்களுக்குள் சிபிஐ முன்பாக சரணடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து தயாநிதி மாறான தரப்பில் செவ்வாயன்று, உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு பிறகு மீண்டும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.