26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதைத்தலைவன் ஆனவர் நகுல். தனது பெயரை நக்குல் என்று மாற்றி 'செய்' என்ற படத்தில் நடித்துள்ளார். மன்னு தயாரித்திருக்கும் இந்த படத்தில் நக்குல், அன்சால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, பிளாரன்ட் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ராஜ்பாபு. 'செய்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் கதைத்தலைவன் நக்குல் பேசுகையில், வரும் வெள்ளிக் கிழழை 'செய்' படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 திரைகளில் வெளியாகும் என்றும் உறுதியளித்திருந்தார்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அதற்காக யாருடைய மனதும் புண்படுத்த வேண்டாம் என்று காத்திருந்து வருகிறோம். ஆனால் இன்று எதிர்பாராத வகையில் குறிப்பிட்ட நாளில் படம் வெளியாகும். ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 திரைகளில் படம் வெளியாகாது என்றும், அந்த நாளில் விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு புடிச்சவன்' என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 திரைகளில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,969.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.