Show all

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை.

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளவிவசாயிகள் கடன்சுமை மற்றும் வட்டி நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. மாண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் மாவட்டத்தில் நிலவும் வறட்சி, பயிர்சேதம், கடன்சுமை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அம்மாநில அரசு அதிகக்கடன் வாங்கி இருக்கும் விவசாயிகளின் பட்டியலை எடுத்து அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.