Show all

நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு! இன்னும் தொடரும் வரலாற்றுச்சோகம்- பாஜகவின் பணவிளையாடல்

பணமாகச் சேமிக்கப்பட்டதால் உழைப்பின் பயன் சுழியமாகிப் போன அவலம். உழைப்பின் ஆதாயமான பணத்தை எப்படி செல்லாததாக்க முடியும்? செல்லாததாக்கிய மோடியின் பணவிளையாட்டால் இரண்டு முதியவர்களின் உழைப்பு விணாய் போனது. நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு!

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருப்பூர் அருகே பேரன், பேத்திகளுக்காக மூதாட்டிகள் இருவர் சேமித்து வைத்திருந்த பணம், செல்லாத வெற்றுத்தாள்கள் என தெரியவந்ததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பல்லடம் அருகே பூமலூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகிய மூதாட்டிகள் இருவரும், மகன்கள் வீட்டில் வசித்து வரும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிசிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாயை எடுத்து, மகன்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை பார்த்து மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

காரணம் அவை ரூபாய்தாள்கள் அல்ல வெற்றுதாள்கள். அனைத்தும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களாக இருந்தன. பணமதிப்பிழப்பு விளையாட்டு தெரியாமல், மூதாட்டிகள் இருவரும் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இந்த பணம் செல்லாது என மகன்கள் தெரிவித்ததால் மூதாட்டிகள் இருவரும் அதிர்ச்சி  அடைந்தனர். பேரன், பேத்திகளுக்கு தருவதற்காக பல ஆண்டுகளாக சிறுக சிறுக பல்வேறு வேலைகளுக்கு சென்று சேமித்து வைத்த பணம், வீணாகி விட்டதே என, அவர்கள் சோகத்தில் உறைந்தனர். வீணாகிப் போனது அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பு. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்களே கோட்பாடுகள் என்பதுதானே தமிழ் முன்னோர் சொலவடை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,349.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.