Show all

உலகம் உள்ள வரை வியந்து போற்றும் வகையான விளக்கம்! பெட்ரோல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாதாம்

25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையைக் கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் இல்லையென்று மக்களுக்கு தெரியும். அவைகளுக்கான காரணிகள் இந்திய அரசிற்கு அப்பாற்பட்டது என்றும் அவர்களுக்கு தெரியும். எல்லோருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது, ஆனால் இன்று எதற்கு போராட்டம் நடந்துள்ளது என்று பாஜக அரசு: உலகமே வியக்கும் வகையான, அறிவின் உச்சமாக, உலகம் உள்ள வரை வியந்து போற்றும் வகையான கருத்தை வெளியிட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,906.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.